search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கொலை"

    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் புதியதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்சமயம் அந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி நடைபெற்ற போது பணியாளர்கள் தங்குவதற்காக அங்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாடில்லாத அந்த தகர செட் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. கடந்த 27 ந் தேதி அந்த தகர செட் உள்ள பகுதிக்கு சிலர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர். மேலும் அந்த பெண்ணை கொன்ற கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அந்த பெண் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கவிதா (வயது 46) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஆண் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கவிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • மனைவி சின்னப் பிள்ளைக்கும், ராமருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
    • மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (55). கூலித் தொழிலாளி. இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபிள்ளை(50) என்பவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    ராமருக்கும் அவரது மாமியார் குடும்பத்தினருக்கும் கடந்த 20 வருடமாக பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமரின் மாமியார் இறந்து விட்டார்.நேற்று தன்னுடைய தாயின் கரும காரியத்திற்கு செல்வதாக ராமரிடம் சின்னபிள்ளை தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் கரும காரியத்திற்கு கணவரிடம் சொல்லாமல் சின்னபிள்ளை நல்லாத்தூர் கிராமத்திற்கு சென்றதாகத் தெரிகிறது. பின்னர் மாலை வீட்டுக்கு வந்த மனைவி சின்னப் பிள்ளைக்கும், ராமருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராமர் நேற்று இரவு 9 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த சின்னப்பிள்ளையின் தலையில் அம்மி குழவி கல்லால் தலையில் பலமுறை அடித்துள்ளார் இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சின்னப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ராமர் சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று தன் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னப் பிள்ளையின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள கனகம்மாசத்திரம், பாளையக்கார தெருவை சேர்ந்தவர் சசிகலா (வயது33). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் சசிகலா உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் கத்திக்குத்து காயமும் இருந்தது.

    உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். விசாரணையில் கள்ளக்காதலில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக முத்து கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சசிகலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து இருந்தபோது எனக்கு கடன் பிரச்சினை இருந்ததால் ரூ.2 ½ லட்சம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் சசிகலா அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றபோது என்னை தாக்கி தள்ளிவிட்டார். கோபம் அடைந்த நான் அவரது கழுத்தை கத்தியால் அறுத்தும், சரமாரியாக குத்தியும் விட்டு தப்பி ஓடிவிட்டேன். இதில் பலத்த காயம் அடைந்த சசிகலா இறந்து போனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுகாயங்களுடன் ஜாய் களஞ்சியம் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • கைதான ஏசுராஜா திண்டுக்கல் சிறையிலும், பத்மினி நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    வத்தலக்குண்டு:

    சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் முதியோர் இல்லம் நடத்தி வந்தார். கடந்த மாதம் தனது மனைவி ஜாய் களஞ்சியத்துடன் (வயது 55) வத்தலக்குண்டு வந்தார். முதியோர் இல்லத்தில் மனைவியை விட்டுவிட்டு செல்வராஜ் சென்னை சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த 16ம் தேதி அவரை தாக்கி கொல்ல முயற்சி நடந்தது. படுகாயங்களுடன் ஜாய் களஞ்சியம் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் முதியோர் இல்லத்தில் காவலாளியாக இருந்த ஏசுராஜா (36) என்பவர்தான் ஜாய் களஞ்சியத்தை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

    மேலும் அவரது காரில் இருந்து தப்ப முயன்றபோது திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே டீசல் தீர்ந்ததால் அங்கேயே நிறுத்திவிட்டு ஏசுராஜா தப்பி ஓடினார். அவரை வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் கர்ணா காந்தி, சேக்அப்துல்லா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜாய் களஞ்சியம் உயிரிழந்தார்.

    இந்நிலையில் போலீசார் ஏசுராஜாவின் செல்போன் எண்ணை வைத்து தேடி வந்த நிலையில் பல்லடத்தில் அவர் தனது கள்ளக்காதலியுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று ஏசுராஜா மற்றும் அவரது கள்ளக்காதலி பத்மினி(34) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், திருவாரூரை சேர்ந்த ஏசுராஜா என்பவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வந்தார்.

    அப்போது சென்னையை சேர்ந்த பத்மினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இருவரும் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக வசதியான வீட்டில் வேலைக்கு சேர்ந்த அங்கு சம்பளம் வாங்கும் வரை இருந்து பின்னர் அங்கேயே கொள்ளையடித்து வேறு ஊருக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி வத்தலக்குண்டுவில் முதியோர் இல்லம் நடத்தி வந்த ஜாய் களஞ்சியத்தை தீர்த்துவிட்டு அவரிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தனர். ஆனால் பணம் இல்லாததால் அவர் அணிந்திருந்த நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். பல்லடத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஏசுராஜா தனது முகவரி மற்றும் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மீண்டும் இயங்கியதால் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    கைதான ஏசுராஜா திண்டுக்கல் சிறையிலும், பத்மினி நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். 

    • சாம்ராஜ் தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சத்யாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சாம்ராஜ், சத்யாவை வெட்டிக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மல்லாபுரம் அடுத்த செங்கானூரைச் சேர்ந்த சாம்ராஜ் (23) என்பவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினர் மகள் சத்யா (23) என்பவரை திருமணம் செய்ய விருப்பப்பட்டு பெண் கேட்டுள்ளார். ஆனால், சத்யாவுக்கு அவரது குடும்பத்தார் வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதையறிந்த சாம்ராஜ் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் சத்யாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்போது சத்யா மறுத்ததால், திடீரென சத்யாவை வெட்டிக்கொலை செய்தார். இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கல்பனா ஆஜராகி வாதாடி வந்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் சாம்ராஜ், சத்யாவை வெட்டிக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து குற்றவாளி சாம்ராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயமாரி (வயது44). எலக்ட்ரீசியன். இவருக்கு சந்தியா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயமாரி, சந்தியாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தியா சாப்பிடாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஜெயமாரி ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெயமாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
    • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூர் அவிநாசி-மங்கலம் புறவழிச்சாலை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் அப்பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

    இதில் அப்பகுதியில் உள்ள ஒரு கடை முன் அந்தப்பெண் தூங்கி கொண்டிருந்ததும், அவ்வழியே வந்த வாலிபர் ஒருவா் அந்த பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததும் பதிவாகியிருந்தது.

    தொடா்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்த நபா் திண்டுக்கல் மாவட்டம் புஷ்பபுதூா் பகுதியை சோ்ந்த ஜெயபால் ராஜ்சிங் மகன் ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங்(வயது22) என்பதும், 2 மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றபோது அவிநாசி-கோவை பிரதான சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி, அவிநாசி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சற்று மனநிலை பாதித்தவர். இதனால் அவர் அவினாசி-மங்கலம் சாலையில் சுற்றி திரிந்து வந்துள்ளார். இரவு அங்குள்ள கடைகளில் படுத்து தூங்குவது வழக்கம். இதனை ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங் நோட்டமிட்டு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் அவரை பணிக்கு வர வேண்டாம் என்று ஆம்புலன்ஸ் உரிமையாளர் கூறிவிட்டார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் அவிநாசி-மங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்துள்ளார். மேலும் கஞ்சா போதையிலும் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் மனநிலை பாதித்த பெண் தனியாக சுற்றிதிரியவே அவரிடம் பேச்சு கொடுத்த ஹில்டன், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

    தொடர்ந்து அவிநாசி-மங்கலம் சாலையில் சுற்றி திரிந்த ஹில்டன், அங்குள்ள கடை முன்பு மனநிலை பாதித்த பெண் படுத்து கிடப்பதை பார்த்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியில் சொல்லி விடுவாளோ என்று பயந்த ஹில்டன், திடீரென அங்கு கிடந்த கல்லை தூக்கி பெண்ணின் தலையில் போட்டார். இதில் அந்த பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் பெண்ணின் உடலை மறைக்க அங்குள்ள வடிகால் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

    இதையடுத்து உடலை கடை முன்பு இருந்து தரதரவென இழுத்து சென்றார். சாலையை கடந்து மறுபுறம் வரை இழுத்து சென்று வடிகால் பகுதியில் போட்டு விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். அப்போது போதை மயக்கத்தில் இருந்ததால் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினார். பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். நண்பர்கள் வந்து ஹில்டனை மீட்டு அவிநாசி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அப்போது நண்பர்களிடம் கொலை செய்ததை கூறவில்லை.

    இந்தநிலையில் வடிகால் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை மீட்க தனியார் ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பெண்ணை கொலை செய்த வாலிபரின் உருவம் பதிவாகி இருந்ததை போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் காண்பித்தனர்.

    அந்த வாலிபரின் உருவத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்த போது ஹில்டன் என்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் விவரத்தையும் கூறியுள்ளார். அதன்பிறகே போலீசார் ஹில்டனை கைது செய்துள்ளனர். மேலும் கொலை செய்ததற்காக காரணங்களை ஹில்டன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனநிலை பாதித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஹில்டன் , பெண்ணின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    • கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • மனநிலை பாதித்த பெண்ணை கொன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி-மங்கலம் சாலையில் உள்ள ஒரு கடை முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவர் தங்கியிருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதையடுத்து உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை அங்குள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிக்கு தரதரவென இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இன்று காலை பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்தவரின் உருவம் மற்றும் பெண்ணின் உடலை இழுத்து செல்லும் காட்சிகள் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர். மனநிலை பாதித்த பெண்ணை கொன்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மனைவிடன் சேர்ந்து கொலை செய்து ஓடையில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது
    • கற்பழிப்பு புகாரை திரும்ப பெறாததால் கொலை செய்யப்பட்டுள்ளார்

    திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பெண் மேக்-அப் கலைஞர். சினிமா துறையில் மேக்-அப் கலைஞராக வேலைப்பார்க்கும் 48 வயது நபருடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது.

    48 வயது நபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. இருந்த போதிலும் இவர்கள் இருவரும் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால், அந்த நபர் மீது பெண் கலைஞர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். 2019-ல் புகார் அளித்துள்ளார். தற்போது மனைவியுடன் வாழ்ந்து வரும் அந்த நபர், கற்பழிப்பு புகாரை திரும்பப்பெற வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பெண் மேக்அப் கலைஞர் புகரை திரும்பப்பெற மறுத்துள்ளா்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி மேக்-அப் மேன் ஒருவர், பெண் கலைஞரின் தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது, உங்களது சகோதரியின் போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் உடனடியாக பெண் மேக்-அப் கலைஞரின் தங்கை, காவல் நிலையத்தில் தனது சகோதரியை காணவில்லை என புகார் அளித்தார். அப்போது, மேக்-அப் கலைஞர் ஒருவர் தனது சகோதரியை கொன்று விடுவதாக மிரட்டினார் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவர் தனது சகோதரியை கொலை செய்திருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பெண் கலைஞர் உடலையும் தேடி வந்தனர்.

    அப்போது 43 வயதான மேக்-அப் கலைஞர் தனது மனைவியுடன் சேர்ந்து பெண் மேக்-அப் கலைஞரை கொலை செய்து, உடலை சூட்கேஸில் அடைத்து, ஓடையில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அந்த நபரும், அவரது மனைவியும், பெண் மேக்-அப் கலைஞரை நீரில் மூழ்கடித்து கொலை செய்து பின்னர், உடலை சூட்கேஸில் அடைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    விசாரணைக்குப்பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, வருகிற 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிவில் பெண் கலைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விவரம் தெரியவரும்.

    ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்குள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் உள்ள ஓடையில் பெண் உடல் ஒன்று கண்டு எடுக்கப்பட்டதாகவும், யாரும் உடலை பெற வராததால் இறுதிச் சடங்கு நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் விபத்தால் ஏற்பட்ட மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தற்போது மகாராஷ்டிராவில் மாநிலம் நைகான் போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுககளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர்:

    புதுவை வில்லியனூர் அருகே அனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54) கூலி தொழிலாளி அவரது மனைவி கலையரசி (47). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வருவார்.

    நேற்று காலை மகன் ராஜசேகர் மாட்டை ஓட்டிக் கொண்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன், கலையரசி மட்டும் தனியாக இருந்தனர்.

    அப்போது ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். ஆனால் கலையரசி பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கலையரசியை தாக்கி அவரது சேலையால் கழுத்தை நெரித்தார். இதில் கலையரசி பரிதாபமாக இறந்து போனார்.

    உடனே ராேஜந்திரன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். மாடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராஜசேகர் தாய் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க பணம் கொடுக்கமறுத்ததால் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்திரம் அடைந்த நல்லையன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • கோபத்தின் உச்சிக்கு சென்ற நல்லையன் மனைவியின் தலையில் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து போட்டார்.

    மேலூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் (வயது 48). இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த கலா (45) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் பொட்டி, கூடை முடையும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இதற்காக அவர்கள் கருங்காலக்குடியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரு காலியிடத்தில் குடிசை அமைத்து தங்கியிருந்தனர். நல்லையனுக்கு குடிப்பழக்கமும் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு தம்பதியினர் தூங்க சென்றனர். நள்ளிரவில் திடீரென்று எழுந்த நல்லையன் மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் கலா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நல்லையன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற நல்லையன் மனைவியின் தலையில் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து போட்டார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கலா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகர், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்த கொலையுண்ட கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நல்லையனை கைது செய்து, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கருங்காலக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.
    • மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. அடிலாபாத் புறநகர் பகுதியான பங்கர் குடவை சேர்ந்தவர் அருண். தீபாவுக்கும், அருணுக்கும் கடந்த மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அருண் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தீபா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். திருமணமான புதிதில் இப்படித்தான் இருக்கும் சிறிது நாள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென அவரது பெற்றோர் தீபாவுக்கு அறிவுரை வழங்கினர்.

    ஆனால் அருணின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் விரத்தி அடைந்த தீபா தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு செல்போனில் தெரிவித்தார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு மகள் வீட்டிற்கு வந்த பெற்றோர் தீபாவை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 28-ந் தேதி மாமியார் வீட்டிற்கு வந்த அருண் மனைவியை இனிமேல் கொடுமை படுத்தாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தார்.

    இதனை உண்மை என நம்பிய அவரது பெற்றோர் தீபாவை கணவருடன் அனுப்பி வைத்தனர். தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

    நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண் தீபாவின் தலையை சுவற்றில் மோதினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வலியால் அலறி துடித்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அருண் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தீபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் சரணடைய சென்றார். வீட்டில் பைக் இல்லாததை கண்ட அருணின் தந்தை ஜெயவந்த் ராவ் அருணுக்கு போன் செய்தார். அப்போது அருண் மனைவியை கொலை செய்து விட்டதாகவும் போலீசில் சரணடைய வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது ஜெயவந்த் ராவ் மகனை வீட்டிற்கு வருமாறு கூறினார்.

    இதையடுத்து அருண் தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் அருண் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கணவன் மனைவி 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்ய உதவியதாக அருணின் பெற்றோர் ஜெயவந்த் ராவ், லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×